பத்திரிக்கைச் செய்திக்குறிப்பு
பெறுநர்
உயர்திரு.செய்தி ஆசிரியர் அவர்கள்
கோவை.
ஐயா வணக்கம்.
இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பாக 6 அம்ச கோரிக்கையை மத்திய நரேந்திர மோடி அரசு நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் 19.06.2014 அன்று காலை 11.00 மணி அளவில் கோவை தமிழ்நாடு ஹோட்டல் முன்பாக மாநில தலைவர் தமிழ்திரு.அர்ஜுன் சம்பத் வாழ்த்துரை வழங்க மாநில செயலாளர் T.C.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கீழ்கண்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
1. தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் குடிநீருக்கே தீண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் காவிரி நதி நீர் தொடர்பான சிக்கலுக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரிநீர் பங்கீடு ஆணையத்தையும் உடனடியாக அமைக்க உத்தரவிட்டும் மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்பது வேதனைக்குரியது. கர்நாடக முதல்வர் தலைமையில் மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று கூறிய கருத்துக்களுக்கு தமிழக முதலமைச்சர் 30 பக்கங்களுக்கு மேல் விளக்க கடிதம் அளித்தும் இது வரை மத்திய அரசு தமிழக மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யக்கூடிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது. உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு குழுவையும் அமைத்து தமிழக விவசாயிகளை காக்க வேண்டும்.
உச்ச நீதி மன்றம் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு பலவித கட்டுப்பாடுகளை விதித்து அதை தமிழக அரசும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் கண்காணித்து ஜல்லிக்கட்டை நடத்தி வந்த போதும், தற்போது ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கே மிருகவதை சட்டத்தின் கீழ் தடை விதித்துள்ளது. ஆனால் உழவுக்கும், பாலுக்கும் என்று தங்களது குடும்பங்களை காக்கும் குல தெய்வம் போல் காத்து வந்த பசுக்களை ஒரு சில இடைத்தரகர்கள் அப்பாவிக் மக்களிடம் தவறான தகவல்களை கூறி அவர்களிடம் உள்ள பசு இனங்களை வாங்கி கேரள வியாபாரிகளிடம் விற்று ஒரே லாரியில் 30-க்கும் மேற்பட்டவற்றை அடைத்துச் சென்று கனவில் கூட நினைக்க முடியாத வகையில் கொடூர கொலை செய்து மாமிசமாக விற்று வருகின்றனர். அதனால் தமிழகத்தில் உழவுக்கு மாடுகள் இல்லாமலும், செயற்கை பால் உற்பத்தி செய்யக்கூடிய சூழ்நிலை உள்ளது. இது ஜல்லிக்கட்டில் ஒரு வீரனிடம் பிடிபடும் மாட்டை விட மாமிசத்திற்காக தலையில் சம்மட்டி போன்றவற்றால் பசுவின் தலையில் அடித்து கொல்லுவது எந்த விதத்தில் நியாயமானது. எனவே பசுவினத்தை காப்பாற்ற பசுவதை தடைச் சட்டத்தை தேசிய அளவில் அமுல்படுத்த வேண்டும்.
3. இந்தியா முழுவதும் கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் தங்களது அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெறுவதற்காக, இங்குள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மலை வாழ் மக்களையும், இப்போது பெரு நகரங்களில் கூட ஜெபக் கூடங்களை ஒவ்வொரு தெருவிலும் துவக்கியும், இஸ்லாமியர்கள் பல்வேறு வகைகளிலும் சாதாரண மக்களில் இருந்து பிரபலமானவர்கள் வரை தங்களது ஆசை வார்த்தைகள் மூலம் மதம் மாற்றிவருகின்றனர். இது இந்திய இறையான்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே மதமாற்ற செயல்களை தடுத்து நிறுத்திட மதமாற்ற தடைச் சட்டத்தை தேசிய அளவில் அமுல்படுத்திட வேண்டும்.
4. இந்திய உச்ச நீதிமன்றம் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை தமிழக அரசு 142 அடியாக உயர்த்திக் கொள்ள உத்தரவு அளித்தபிறகு கேரள அரசு தமிழகத்திற்கெதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது முல்லை பெரியாறு அணைப்பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது, கோவையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணைப்பகுதியில் உள்ள நீர்வரத்து குழாய்களை அடைப்பது போன்ற அடாவடி செயல்களை மேற்கொண்டுள்ளது கோவையில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் சிறுவாணி தொடர்பாக கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தும் கூட தனது அடாவடித்தனத்தை தொடர்வதுடன். பல்வேறு இடையூறுகள் மூலம் தமிழகத்துடன் மோதல் போக்கை கேரளா மேற்கொண்டு வருகின்றது இதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.
5. தென்னிந்தியாவின் மான்செஷ்டர் என்றழைக்கப்படும் கோவை இன்று இந்திய இரயிலே துறையால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றது. பருத்தி, மோட்டார், ஜவுளி என்று பல்வேறு துறைகளில் கோடிக்கனக்கான ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் கோவைக்கு இரயில்வே துறை எந்த கட்டமைப்பு வசதியும் பெரிய அளவில் செய்து கொடுக்கப்படவில்லை. கேரள மாநிலம் பாலக்காடு இரயில் நிலையத்தில் நின்று செல்லும் இரயில்கள் கூட கோவை, போத்தனூர் சந்திப்புகளில் நிறுத்தப்படுவதில்லை. இதற்கு கேரளத்தை சார்ந்த இரயில்வே அதிகாரிகள் தான் காரணம். மற்றும் சென்ற மத்திய அரசால் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட இரயிவே திட்டங்கள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல ஆமை வேகத்தில் நடைபெறுகின்றது. எனவே கோவை வழியாக செல்லும் அனைத்து இரயில்களும் கோவை போத்தனூர் சந்திப்புகளில் நின்று செல்வதுடன். தமிழகத்திற்கான இரயில்வே திட்டங்களை வேகமாக செயல் படுத்த வேண்டும்.
6. தமிழக மீனவர்கள் அன்றாடம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது. கொல்லப்படுவது. படகுகள் மின்பிடி சாதனங்கள் சேதப்படுத்தப்படுவது ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத சூழ்நிலையே உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து நம் நாட்டு மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடித்திடவும் நமது உரிமையை நிலைநாட்டிடவும், தமிழக முதல்வர் எடுத்துள்ள கச்சத்தீவை மீட்பது தொடர்பான சட்டமன்ற மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து கட்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
இந்த 6 அம்ச கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்படிக்கு
அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்



No comments:
Post a Comment