Saturday, 28 June 2014

கனவில் கூட நினைக்க முடியாத வகையில் பசுக்கள் கொடூரக் கொலை - இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை தடை செய்ய வேண்டும் - அர்ஜூன் சம்பத்
பெண்ணின் கழுத்தை அறுத்து தங்க நகைகள் கொள்ளை
தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் - மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
இந்திக்கு சமூக வலைத்தளங்களில் முன்னுரிமை என்பது மாபெரும் தவறு - சரத்குமார்
இந்து முன்னணி பிரமுகர் கொலை, ஊர்வலம், வன்முறை! - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், பசுவதை தடைச் சட்டத்தைத் தேசிய அளவில் அமல்படுத்தல், மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தேசிய அளவில் அமல்படுத்தல், முல்லை பெரியாறு - சிறுவாணி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்துடன் மோதல் போக்கைக் கொண்டுள்ள கேரளத்தைக் கண்டித்தல், கோவை வழியாகச் செல்லும் அனைத்து இரயில்களும் கோவை போத்தனூர் சந்திப்புகளில் நின்று செல்வது, கச்சத்தீவை மீட்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை மத்திய நரேந்திர மோடி அரசு நிறைவேற்றக் கோரி, இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பாகக் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
19.06.2014 அன்று காலை 11 மணி அளவில் கோவை தமிழ்நாடு ஹோட்டல் முன்பாக, இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் வாழ்த்துரை வழங்க, மாநிலச் செயலாளர் டி.சி.செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கீழ்கண்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
1. தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் குடிநீருக்கே திண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் காவிரி நதி நீர் தொடர்பான சிக்கலுக்குத் தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் பங்கீடு ஆணையத்தையும் உடனடியாக அமைக்க உத்தரவிட்டும் மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்பது வேதனைக்குரியது. கர்நாடக முதல்வர் தலைமையில் மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பிரதமரைச் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கூறிய கருத்துகளுக்குத் தமிழக முதலமைச்சர் 30 பக்கங்களுக்கு மேல் விளக்கக் கடிதம் அளித்தும் இது வரை மத்திய அரசு தமிழக மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யக்கூடிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது. உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக் குழுவையும் அமைத்து தமிழக விவசாயிகளைக் காக்க வேண்டும்.

No comments:

Post a Comment