Friday, 7 November 2014

மாணவிக்கு பாலியல் தொல்லை : உதவி பேராசிரியர் மீது வழக்கு: 2 மாதத்துக்கு பின் போலீஸ் நடவடிக்கை - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=65352#sthash.mSzGNT5r.dpuf

திருச்சி: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், கமிஷனர் உத்தரவின் பேரில் 2 மாதத்துக்கு பின் உதவி பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தனியார் கல்லூரியில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர், பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். அவர், விடுதியில் தங்கி இருந்தார். இதே கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் அந்தோணி சக்தி. கடந்த 2 மாதம் முன்பு பிரபாவதிக்கு அந்தோணி சக்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். வகுப்பில் தனியாக இருந்த போது, கட்டி பிடித்து முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, வகுப்பறையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார்.

அந்தோணி சக்தி மீது பிரபாவதி தரப்பில் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி, இந்து மக்கள் கட்சி உதவியுடன் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவிடம் புகார் கொடுத்தார். கமிஷனர் உத்தரவின் பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவியிடம் உதவி பேராசிரியர் தவறாக நடக்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 2 மாதத்துக்கு பின் உதவி பேராசிரியர் அந்தோணிசக்தி மீது கோட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து உள்ளனர். - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=65352#sthash.mSzGNT5r.dpuf

No comments:

Post a Comment