Saturday, 22 November 2014

கோவையில் ‘அன்பின் முத்தம்‘ போராட்டம் வணிக வளாகத்தை முற்றுகையிட இந்து மக்கள் கட்சி முடிவு

கோவையில் ‘அன்பின் முத்தம்‘ போராட்டம் வணிக வளாகத்தை முற்றுகையிட இந்து மக்கள் கட்சி முடிவு

பதிவு செய்த நேரம்:2014-11-21 10:06:27
EPP Group Urges Governments to Use ...
கோவை, : இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், வரும் 23ம் தேதி ‘அன்பின் முத்தம்‘ என்னும் நிகழ்ச்சி நடத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். முகநூல் பக்கங்களில் திருவனந்தபுரம், சென்னையை தொடர்ந்து கோவையில் நடக்கும் முத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பொது இடங்களில் இளம்பெண்களும், ஆண்களும் முத்தமிட்டுக்கொள்வது அறுவெறுக்கத்தக்க செயலாகும். நமது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுக்கு ஒவ்வாத அநாகரிக செயலும்கூட. வயது வந்த இருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக்கொள்வது தனிப்பட்ட விஷயம். ஆனால், பொதுஇடங்களில் முத்தமிடுவது கலாச்சாரத்துக்கு விரோதமானது. அதனால், கோவையில் நடக்க உள்ள ‘அன்பின் முத்தம்‘ நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும். இல்லையெனில், இந்து மக்கள் கட்சி மற்றும் கோவை மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வணிக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment